லா ஸ்ட்ரடா
மிருகத்தினுள் விழித்தெழும் அன்பு
யுகன்
ஜம்பனோ மார்பில் இரும்புச் செயினைக் கட்டிக்கொண்டு மூச்சை தம் கட்டி உடைக்கும் வித்தை காட்டி பிழைப்பவன். தன்னிடம் உதவிக்கு இருந்தவள் இறந்து போனதால் அவள் தங்கையை அழைத்துப் போக வருகிறான். அவள் பெயர் ஜெல்சோமினா. வறுமையின் காரணமாக அவளின் விதவைத்தாய் 10000 லிராக்கள் வாங்கிக் கொண்டு அவனுடன் அனுப்புகிறாள். ஜெல்சோமினா குழதைத்தனமானவள். வெகுளி. ஜம்பனோ முரடன். துளியும் அன்பற்றவன்.
அவளுக்கு ட்ரம்பெட், ட்ரம்ஸ் வாசிக்கக் கற்றுக் கொடுக்கிறான். சரியாக வாசிக்காததால் குச்சியால் பலமாக அடிக்கிறான். அன்று இரவு பலவந் தமாக அவளை அடைகிறான்.
மறுநாள் வேறொரு இடத்தில் வித்தை காட்டுகின்றனர். நிறையப் பணம் வசூலாக ஹோட்டலுக்குச் செல்கின்றனர். அங்கே ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் ஜெல்சோமினாவை தெருவிலேயே விட்டு விட்டுப் போய்விடுகிறான். இரவு முழுவதும் வீதியிலேயே அமர்ந்திருக்கிறாள். காலையில் அவனைத் தேடிக் கண்டுபிடிக்கிறாள். நீ என்ன ‘ஸ்தீரி லோலனா’ என்று திட்டுகிறாள். நா ன் செய்யும் எதையும் கேள்வி கேட்காதே. வாயை மூடிக்கிட்டு இரு என்று எச்சரிக்கிறான். நா ட்கள் இப்படியே கழிகிறது.
இப்பொழுது அவன் ஒரு சர்க்கஸ் கம்பெனியில் சேர்கிறாள். முதலாளி அங்கேயிருக்கும் பபூனை அறிமுகம் செய்து வைக்கிறார். அவனைப் பார்த்ததும் ஜம்பனோ சட்டென முகம் திருப்பிக்கொள்கிறான். ஏற்கனவே ஒருவரையொருவர் நன்கு அறிந்தவர்கள். அவன் தொடர்ந்து ஜம்பனோவை கேலி செய்து கொண்டிருக்கிறான். அவனின் தொடர் கேலியினால் ஒரு நாள் ஜம்பனோ கத்தியை எடுத்து குத்தப் போகிறான். போலிஸ் வந்து அவனை கைது செய்கிறது.
பபூன் ஜெல்சோமினாவிடம் அவனோடு இராதே. அவன் முரடன் உன்னை எவ்வளவு கொடுமைப்படுத்டுகிறான் என்கிறான். நா ன் இல்லாட்டா யார் அவரைப் பார்த்துக் கொள்வது என்கிறாள்.
ஜெல்சோமினா மீண்டும் ஜம்பனோவோடு சேர்ந்து பயணம் செய்கிறாள். ஒரு நாள் சாலையில் போய்க் கொண்டிருக்கும் போது பபூனை ஜம்பனோ பார்த்து விடுகிறான். அவனை அடிக்கிறான். இரும்பில் தலைமோதி பபூன் இறந்து விடுகிறான். அவன் காரிலே வைத்து பபூனை பள்ளத்தில் உருட்டி விட்டு விட்டு அங்கிருந்து போய் விடுகிறான்.
ஆனால் அது முதல் ஜெல்சோமினா பபூன் இறந்ததைப் பற்றியே புலம்பிக் கொண்டிருக்கிறாள். சாட்சியே இல்லை. நீயாக உளறி என்னை மாட்டி விட்டு விடாதே என்கிறான் ஜெம்பனோ. அவள் தொடர்ந்து இது பற்றியே பேசிக் கொண்டிருக்க.. ஒரு நா ள் அவள் தூங்கும் போது விட்டு விட்டுப் போய்விடுகிறான்.
வருடங்கள் கடக்கின்றன. இப்பொழுது ஜம்பனோ வேறு ஒரு சர்க்கஸ் கம்பெனியில் இருக்கிறான். மாலை வேளையில் நகரத்திற்குள் உலாவும் போது ஜெல்சோமினா பாடும் பாட்டு கேட்டு அவ்விடத்திற்குப் போகிறான். அப்பாடலை பாடிக்கொண்டிருக்கும் பெண்ணிடம் இந்தப் பாடல் எப்படித் தெரியுமென்று கேட்கிறான். அவள் நான்கு வருடத்திற்கு முன்னால் ஒரு பெண் கடற்கரையில் தனியாக இருந்தாள். அவனை வீட்டிற்கு அழைத்து வந்தோம். அவள் எப்பொழுதும் இந்தப் பாட்டைப் பாடிக் கொண்டிருப்பாள் என்கிறாள். அவள் இப்போது எங்கே என்று அவன் கேட்க இறந்து போய் விட்டதாகச் சொல்ல்கிறான்.
அன்று இரவு நன்றாகக் குடித்து விட்டு பாரில் இருந்தவர்களிடம் சண்டை போடுகிறான். பின் கடற்கைரைக்கு வருகிறான். அவளை நினைத்தபடி வானத்தைப் பார்த்தவன் திடுமென வெடித்து அழத் தொடங்குகிறான்.
வாழ்க்கையில் முதன் முறையாக அழுகிறான். அவளின் இழப்பை நினைத்து அவளின் அருமையை உணர்ந்து அழுது கொண்டிருப்பதோடு படம் முடிகிறது.
ஜெம்பனோ அவளின் அருமை உணர்ந்து அழும் காட்சி பார்வையாளர்களைக் கலங்க வைக்கும். மிருகம் போன்ற அவனுக்குள் அன்பு விழுத்தெழும் அத்தருணம் மகத்தானது.
ஜம்பனோவாக நடித்த ஆண்டனி குயின், ஜெல்சோமினாவாக நடித்த குலிட்டா மாசினா இவர்களின் நடிப்பு அற்புதமானது
ஆஸ்கார் உள்ளிட்ட 100 கணக்கான விருதுகளை வென்ற இந்த இத்தாலிய நாட்டுத் திரைப்படம் 1956ஆம் ஆண்டு வெளியானது இப்படத்தின் இயக்குனர் ஃபெலினி.
No comments:
Post a Comment